இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

Date:

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படை  கட்டளைத் தளபதியாக அவர் தனது கடமைகளை ஆற்றியிருந்தார்.

இவர், பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியை பெற்று 1988 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது இராணுவ சேவையின் போது படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2021 ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி  மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...