இஸ்ரேல் தாக்குதலில் அல்-ஜசீரா ஊடகவியலாளர் கொல்லப்பட்டார்!

Date:

காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்  அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் சமீர் அபுதாகா கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் வல்தஹ்தூஹ் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் காயமடைந்தார்.

கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ், புகைப்படப்பிடிப்பாளர் சமீர் அபுதாகாவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார், அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த சமீர் அபுதாகாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் இராணுவம் பல தடைகளை ஏற்படுத்தி வருவதால் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் போரின் கொடுமையையும், காசா மக்கள் படும் இன்னல்களையும் தனது காணொளி மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வந்த சமீர் அபுதாகாவை இஸ்ரேல் ராணுவம் கொன்று மௌனமாக்கியுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...