இஸ்ரேல் தாக்குதலில் அல்-ஜசீரா ஊடகவியலாளர் கொல்லப்பட்டார்!

Date:

காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்  அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் சமீர் அபுதாகா கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் வல்தஹ்தூஹ் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் காயமடைந்தார்.

கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ், புகைப்படப்பிடிப்பாளர் சமீர் அபுதாகாவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார், அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த சமீர் அபுதாகாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் இராணுவம் பல தடைகளை ஏற்படுத்தி வருவதால் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் போரின் கொடுமையையும், காசா மக்கள் படும் இன்னல்களையும் தனது காணொளி மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வந்த சமீர் அபுதாகாவை இஸ்ரேல் ராணுவம் கொன்று மௌனமாக்கியுள்ளது.

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...