இஸ்ரேல் தாக்குதலில் அல்-ஜசீரா ஊடகவியலாளர் கொல்லப்பட்டார்!

Date:

காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்  அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் சமீர் அபுதாகா கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் வல்தஹ்தூஹ் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் காயமடைந்தார்.

கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ், புகைப்படப்பிடிப்பாளர் சமீர் அபுதாகாவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார், அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த சமீர் அபுதாகாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் இராணுவம் பல தடைகளை ஏற்படுத்தி வருவதால் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் போரின் கொடுமையையும், காசா மக்கள் படும் இன்னல்களையும் தனது காணொளி மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வந்த சமீர் அபுதாகாவை இஸ்ரேல் ராணுவம் கொன்று மௌனமாக்கியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...