இஸ்ரேல் தாக்குதலில் அல்-ஜசீரா ஊடகவியலாளர் கொல்லப்பட்டார்!

Date:

காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்  அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் சமீர் அபுதாகா கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் வல்தஹ்தூஹ் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் காயமடைந்தார்.

கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ், புகைப்படப்பிடிப்பாளர் சமீர் அபுதாகாவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார், அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த சமீர் அபுதாகாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் இராணுவம் பல தடைகளை ஏற்படுத்தி வருவதால் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் போரின் கொடுமையையும், காசா மக்கள் படும் இன்னல்களையும் தனது காணொளி மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வந்த சமீர் அபுதாகாவை இஸ்ரேல் ராணுவம் கொன்று மௌனமாக்கியுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...