சபாநாயகர் தலைமையில் இலங்கை – இந்திய நட்புறவை வலுப்படுத்த புதுடில்லியில் முக்கிய சந்திப்புகள்!

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கையில் இருந்து பாராளுமன்றக் குழுவொன்று கடந்த டிசம்பர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

தூதுக்குழுவில் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் உட்பட அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர்.

புது டில்லியில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு, இந்தியாவுக்கு சென்ற முதல் ‘வெளிநாட்டு பாராளுமன்றக் குழு’ இதுவாகும்.

இலங்கை தூதுக் குழுவினர் 18ஆம் திகதி துணைத் தலைவர் ஸ்ரீ ஜக்தீப் தங்கரை சந்தித்தனர். அதே நாளில் அவர்களை மக்களவையின் சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லாவையும் சந்தித்தனர்.

இலங்கை தூதுக் குழுவை கௌரவிக்கும் வகையில் சபாநாயகர் அவர்களை கௌவுரவிக்கும் வகையில் மக்களவையின் சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா மதிய விருந்து அளித்தார்.

இலங்கைத் தூதுக்குழு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தது.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு பாராளுமன்ற, சமூக, கலாசார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளின் நிகழ்வுகளையும் இலங்கை தூதுக்குழு நேரில் பார்த்தனர். அத்துடன் பாராளுமன்றத்தில் உள்ள சிறப்பம்சங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...