சாகரவுக்கு எதிராக புண்ணாக்கு வாளியுடன் போராட்டம் செய்த மக்கள் போராட்ட இயக்கம்!

Date:

நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த குழுவினர் அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் சந்தர்ப்பம் வழங்காத நிலையில் வீதியிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் புண்ணாக்கு வாளியொன்றை கொண்டுவந்ததுடன், அதனை வீதியில் வைத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...