சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை!

Date:

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்து மருத்துவமனைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், அவரது அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த அண்மையில் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், நாட்டில் சுமார் 2,000 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி தொடர்பாக ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 6 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...