சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை!

Date:

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்து மருத்துவமனைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், அவரது அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த அண்மையில் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், நாட்டில் சுமார் 2,000 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி தொடர்பாக ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 6 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...