ஜெரோம் பெர்னாண்டோவுக்கு 13ஆம் திகதி வரை விளக்கமறியல்

Date:

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி நாடு திரும்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று (30) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

அதன்போது, ​​அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 8 மணி நேர வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தனர்.

இருந்தபோதிலும் மீண்டும் அவரை இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டது.

அதன்படி வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...