சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி நாடு திரும்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று (30) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
அதன்போது, அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 8 மணி நேர வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இருந்தபோதிலும் மீண்டும் அவரை இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டது.
அதன்படி வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.