தமிழகத்தில் வடியாத வெள்ளம்; பசியால் வாடும் மக்கள்: நான்காவது நாளாக நிவாரண உதவிகள் வழங்கிய மஜகவினர்!

Date:

மிக்ஜாம் புயல் காரணமாக இந்தியாவில் தமிழகம் முழுவதும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எப்போதும் போல தமிழ் நாட்டிலுள்ள பல பகுதிகளில் காணப்படுகின்ற மனிதாபிமானமும் மனிதநேயமும் மேலோங்குகின்ற சந்தர்ப்பமாகவே வெள்ள நிவாரணப்பணிகள் அமைகின்றன.

இதன்மூலம் தங்களுடைய சமூக நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் மிக அழகான முறையில் எப்போதும் வெளிப்படுத்திக்காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் இந்து, முஸ்லிம் மக்கள் நெருக்கமான உறவினையும் அடையாளங்களையும் இதனூடாக தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.

அதற்கமைய தமிழ்நாட்டில் ஒரு அரசியல் அமைப்பாகவும்   சமூக சேவை அமைப்பாகவும் செயற்படுகின்ற மனித நேய ஜனநாயக் கட்சி முன்னெடுத்து வரும் வெள்ளி நிவாரணப்பணிகள் பாராட்டுக்குறியது.

அதற்கமைய தமிழகத்தில்  மழை பாதிப்பின் தாக்கம் தொடரும் நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நான்காவது நாளான இன்று  நிவாரண பணிகள் தொடர்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மஜக-வினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
யாரும் உதவி செய்யாத இடங்களாக கேட்டறிந்து அங்கு போய் நிவாரண உதவிகளை செய்கின்றனர்.
அதற்கமைய, இன்றைய தினம் திருவள்ளூர் – மணலி – விச்சூர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில்,  மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று மதிய உணவுகளை வழங்கினார்.

அதேநேரம் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இப்பகுதியில் 1000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு மஜக-வினர் மதிய உணவுகளையும், குடிநீர் போத்தல்களையும் வழங்கினர்.

பின்னர் மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழுவில் இரவு பகல் பாராமல் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் மஜக-வினரை பொதுச்செயலாளர் அவர்கள் நலம் விசாரித்து உற்சாகமூட்டினார்.
#

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...