தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை: 75 வீதம் குறைவடைந்த கேக் விற்பனை

Date:

இந்த ஆண்டு நத்தார் பண்டிகையின் போது கேக் விற்பனை 75 வீதம் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டைவிட 2023 ஆம் ஆண்டு கேக் விற்பனை 25 வீதம் குறைவடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முட்டை உள்ளிட்ட கேக் உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, நத்தார் பண்டிகைக் காலத்தில் வீடுகளில் கேக் தயாரிக்கும் நடவடிக்கை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...