நத்தாரைக் கொண்டாட பணம் இல்லை; உயிரை மாய்க்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தை

Date:

நத்தாரைக்  கொண்டாட பணம் இல்லாததால் குடும்பஸ்தர் ஒருவர்  தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த  சம்பவம்  மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர்  நேற்றிரவு 11 மணியளவில்  கல்லடி பாலத்தில் இருந்து  குதித்துள்ள நிலையில் பொதுமக்களால்  காப்பாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 42 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான இவர் மேசன் தொழில் செய்து வந்துள்ள நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டடத்தொழில் இல்லாமல்  பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாத நிலை மற்றும் மனைவியின் நச்சரிப்பு போன்ற காரணங்களால் மனக்கவலையடைந்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்த குற்றச் சாட்டில் குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...