பணயக் கைதிகளை மீட்டுத்தர வலியுறுத்தி டெல்அவீவில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Date:

நேற்றிரவு நடைபெற்ற இஸ்ரேலிய இராணுவ சபையின் கூட்டத்தை அடுத்து, பணயக் கைதிகளை மீட்டுத்தர வலியுறுத்தி டெல்அவீவில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹமாஸ் உறுப்பினர்கள் என்று தவறாகக் கருதி காசாவில் இஸ்ரேலியப் படையினரால் மூன்று பணயக்கைதிகள் சோகமான முறையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானவர்கள் டெல் அவிவில் வீதிகளில் இறங்கி அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பவும் ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை எட்டவும் அழைப்பு விடுத்தனர்.

சோகமான யுத்தத்திலிருந்து நாடு தத்தளித்து வரும் நிலையில்,  100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளின் சுதந்திரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், சண்டையை நிறுத்தவும் இஸ்ரேலுக்கு அழைப்புகள் எழுந்துள்ளன.

“நாங்கள் இறந்த உடல்களை மட்டுமே பெறுகிறோம். நீங்கள் சண்டையை நிறுத்தி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் ஏற்பாடு செய்த டெல் அவிவ் பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

யோதம் ஹைம், சமர் தலால்கா மற்றும் அலோன் லுலு ஷம்ரிஸ் என அடையாளம் காணப்பட்ட மூன்று பணயக்கைதிகள் வெள்ளிக்கிழமை காசா நகரின் ஷெஜாயா பகுதியில் படையினரால் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

வெள்ளைக் கொடியை ஏந்தியவாறும், ஹீப்ரு மொழியில் உதவிக்காகக் கூச்சலிட்ட போதும் படையினரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொலைச் செய்தி இஸ்ரேலில் எதிர்ப்புகளைத் தூண்டியது, பணயக்கைதிகளின் சில உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் அடுத்ததாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.

இந்த சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க ராணுவம் மாற்றங்களைச் செய்யும் என்று ராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி சனிக்கிழமை தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...