பாகிஸ்தான் பொதுத்தேர்தல்; முதல் முறையாக இந்து மத பெண் வேட்புமனு தாக்கல்!

Date:

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக,கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் புனேர் மாவட்டத்தைச் சவேரா பிரகாஷ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண் முதல் முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சவேரா பிரகாஷின் தந்தை ஓம் பிரகாஷ் ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார்.

தனது தந்தையை பின்பற்றி அரசியலில் நுழைய முடிவு செய்ததாகவும், தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக பணியாற்றுவேன் எனவும் சவேரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற சவேரா பிரகாஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனேர் மாவட்ட மகளிர்  அணி பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...