பிற்போடப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா பிரவேசப் பரீட்சை டிசம்பர் 9ஆம் 10ம் திகதிகளில்!

Date:

2023/2024ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் 2023/12/09 மற்றும் 10 ஆந் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறும்.

09/12/2023 திகதி சனிக்கிழமை வடக்கு, வட மத்திய, வட மேல், தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் இடம்பெற உள்ளன.

10/12/2023 திகதி ஞாயிற்றுக்கிழமை கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களுக்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் இடம்பெற உள்ளன.

ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் பாட நெறிகளில் பயிற்றுவிக்கப்படுவர்:

முதல் மூன்று வருடங்கள்

1. அடிப்படை இஸ்லாமியக் கற்கைகள்
2. அறபு மொழி
3. க.பொ.த உயர் தரம் (கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள்)

க.பொ.த உயர் தரத்திற்கு பின்னரான நான்கு வருடங்கள்

1 இஸ்லாமியக் கற்கைகளில் சிறப்புத் தேர்ச்சி
2. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்

1. க.பொ.த. ( சா.த) பரீட்சையில் இஸ்லாம், தமிழ், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அவற்றில் மூன்று பாடங்களில் திறமைச் சித்திகளைப் (C) பெற்றிருத்தல். வர்த்தகப் பிரிவில் இணைவதற்கு மேற்குறிப்பிட்ட தகைமைகளுடன் கணிதம் அல்லது வரலாறு அல்லது வர்த்தகப் பாடத்தில் திறமைச் சித்தியைப் பெற்றிருத்தல்.
2. 2006.01.31 ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்.
3. தேக ஆரோக்கியமும், நற்பண்புகளும் உடையவராக இருத்தல்.

பரீட்சாத்திகள் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்

1. பிறப்புச் சாட்சிப் பத்திரம்
2 க.பொ.த. (சா.த) பரீட்சை பெறுபேற்று அட்டை
3. ஆள் அடையாள அட்டை
4. மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
5. பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
6. புலமைச் சான்றிதழ்கள்

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

* நேர்முகப் பரீட்சை காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகும்.
* எழுத்துப்பரீட்சை நன்பகல் 12.00 மணிக்கு இடம்பெறும்.
* விண்ணப்பப் படிவங்கள் நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினத்தில் ஜாமிஆ வாயிற்காவல் பகுதியில் விநியோகிக்கப்படும்.
* கல்வி, விடுதி வசதிகள் இலவசம்
* மாதாந்த உணவுக்கட்டணம் 14000 ரூபாய்
* சேர்வுக் கட்டணம் 20000 ரூபாய்

மேலதிக விபரங்களுக்கு 0776504765

Popular

More like this
Related

மனித கௌரவம் என்பது மரணத்தைவிட முக்கியமானது: நிவாரண திட்டங்களை பிரதிபலிக்கும் புத்தளம் கவிஞர் மரிக்காரின் கவிதை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக வெள்ளப்பாதிக்குள்ள மக்கள் எதிர்கொண்ட...

டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய...

துருக்கியில் மாபெரும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.

துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில்...

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்!

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக,...