போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது!

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற மத வழிபாடு ஒன்றின் போது முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சட்டின் கீழ் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று முன்தினம் (29) காலை இலங்கைக்கு வருகைத்தந்தார்.

பேராயர் முன்வைத்த மனுவின் பிரகாரம், போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.

Popular

More like this
Related

மனித கௌரவம் என்பது மரணத்தைவிட முக்கியமானது: நிவாரண திட்டங்களை பிரதிபலிக்கும் புத்தளம் கவிஞர் மரிக்காரின் கவிதை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக வெள்ளப்பாதிக்குள்ள மக்கள் எதிர்கொண்ட...

டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய...

துருக்கியில் மாபெரும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.

துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில்...

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்!

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக,...