முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

Date:

2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை முட்டை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் 35 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.

சந்தையில் அசாதாரணமான முறையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளை நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ கூறினார்.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...