ஹமாஸ் அமைப்பின் தலைவரை விரைவில் பிடிப்போம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை

Date:

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் 2 மாதங்கள் முடிவடைந்தது.

இந்த போரில் இருதரப்பிலும் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாரைப் பிடிக்கப் போவது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்தார்.

மேலும், ஹமாஸ் தலைவர் இருப்பதாக நம்பப்படும் காசாவின் தெற்குப்பகுதிகளைச் சுற்றி இஸ்ரேலின் படை வளைத்து விட்டதாகத் தெரிவித்த பெஞ்சமின், தற்போது அவர்கள் சின்வாரின் வீட்டைச் சுற்றி வளைத்திருப்பதாகவும் கூறினார்.

அங்கிருந்து அவர் எளிதாகத் தப்பி ஓடிவிடுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் விரைவில் அவரைப் பிடிக்கப்போவது உறுதி எனச் சூளுரைத்தார்.

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...