அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் இந்தப் பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி சிவப்பு பருப்பு, வெள்ளை நாட்டரிசி, வெள்ளை பச்சையரிசி என்பன தலா ஒரு ரூபா குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உருளைக்கிழங்கு, சிவப்பரிசி, ரின் மீன் என்பன 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளன .
இந்த விலை குறைப்பு 28 டிசம்பர் 2023 முதல் அமுலுக்கு வருகிறது.