08 மாத குழந்தையுடன் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Date:

முறைகேடான கணவனுக்கு கப்பம் கட்ட முடியாமல் தனது எட்டு மாத மகளுடன் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாயை காவல்துறை விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

அஹுங்கல்ல வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் இவர் முறைகேடான உறவில் இருந்துள்ளார், அந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி இவர் தன்னுடன் இருந்த பொழுதுகளை காணொளியாக எடுத்துள்ளார். இவ்வாறு எடுத்த காணொளிகளை அவரது கணவனுக்கு அனுப்பி வைப்பதாக மிரட்டி, பணம் பறித்துள்ளார்.

இதன்படி இதுவரை சுமார் நான்கு இலட்சத்தை பெற்றுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை (28) மதியம் அவர் அறுபதாயிரம் ரூபாவை கேட்டதாகவும் அதனை கொடுக்க முடியாத நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் எட்டு மாதக் குழந்தையுடன் புகையிரதம் முன் குதிக்க முயற்சித்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

பெண்ணுடன் முறைசாரா உறவைப் பேணி அவருடன் அறையில் கழித்த தருணங்களை பதிவு செய்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஹுங்கல்ல பொலிசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...