10,000 பேருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: முதலாவது குழு நேற்று பயணம்

Date:

விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் முதலாவது குழு நேற்று (18) இரவு இஸ்ரேலுக்குச் சென்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தக் குழுவில் முப்பது பேர் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருபது பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று காலையும்  முப்பது பேர் கொண்ட மற்றொரு குழு இன்று இரவும் இஸ்ரேலுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற வைபவத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முதல் தொகுதி தொழிலாளர்களுக்கான விமான டிக்கெட்டுகள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், அடுத்த சில வாரங்களில் 10,000 பணியாளர்கள் இஸ்ரேலுக்கு செல்ல முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்கு எந்தத் தரப்பினருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை என கூறிய அவர், வெளிநாடுகளுக்குச் சென்று யாராவது பணம் கொடுத்து வேலை வாய்ப்புகளைப் பெற்றிருப்பது தெரியவந்தால், இரு நாட்டு அரசுகளும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்றார்.

நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகளுக்காக இருபதாயிரம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேலும் இணங்கியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...