2022 தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளுக்காக காத்தான்குடி நகர சபைக்கு 2ஆவது இடம்!

Date:

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2022 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் நகர சபைகளிற்கான பிரிவில் காத்தான்குடி நகர சபைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இரண்டு மாதங்களாக காத்தான்குடி பொது நூலகத்தினால் ஏகப்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மாணவர்களை நூலகத்துடன் இணைக்கும் பாரிய பணி மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களுக்கான விவாதப் போட்டி, அறபு எழுத்தணிப் போட்டி, அதான் சொல்லல் போட்டி, அறபு வாசிப்புப் போட்டி, நாடகப் போட்டி, வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, மாணவர் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, சிறந்த வாசகரைத் தெரிவு செய்யும் போட்டி, சிறுவர் ஆக்கத்திறன், கலைத்திறனை வெளிக்கொணரும் கண்காட்சி, கட்டுரைப் போட்டி, அறிவுக்களஞ்சிய போட்டி, 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பாடல் போட்டி, சிங்கள வாசிப்பு போட்டி, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புப் போட்டி, சிறந்த வீட்டு நூலகம் என பல நிகழ்வுகளை சிறப்புடன் நடாத்தியிருந்தார்கள்.

இதற்காக பெரிதும் பாடுபட்டவர் காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ரிப்கா ரபீக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகம் பிரதேச சபை மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...