2022 தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளுக்காக காத்தான்குடி நகர சபைக்கு 2ஆவது இடம்!

Date:

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2022 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் நகர சபைகளிற்கான பிரிவில் காத்தான்குடி நகர சபைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இரண்டு மாதங்களாக காத்தான்குடி பொது நூலகத்தினால் ஏகப்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மாணவர்களை நூலகத்துடன் இணைக்கும் பாரிய பணி மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களுக்கான விவாதப் போட்டி, அறபு எழுத்தணிப் போட்டி, அதான் சொல்லல் போட்டி, அறபு வாசிப்புப் போட்டி, நாடகப் போட்டி, வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, மாணவர் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, சிறந்த வாசகரைத் தெரிவு செய்யும் போட்டி, சிறுவர் ஆக்கத்திறன், கலைத்திறனை வெளிக்கொணரும் கண்காட்சி, கட்டுரைப் போட்டி, அறிவுக்களஞ்சிய போட்டி, 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பாடல் போட்டி, சிங்கள வாசிப்பு போட்டி, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புப் போட்டி, சிறந்த வீட்டு நூலகம் என பல நிகழ்வுகளை சிறப்புடன் நடாத்தியிருந்தார்கள்.

இதற்காக பெரிதும் பாடுபட்டவர் காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ரிப்கா ரபீக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகம் பிரதேச சபை மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...