24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

Date:

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திலே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவைச் சேர்ந்த 109 சந்தேக நபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 14 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 184 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் ஒரு கிலோகிராம் ஹீரோயின் மற்றும் 19,507 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...