ACTJ மீண்டும் சூறா கவுன்சிலில் இணைவு!

Date:

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட வேட்டையாடல்களின் போது தடை செய்யப்பட்டிருந்த அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், தற்பொழுது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய சூறா கவுன்சிலில் மீளவும் இணைந்து கொண்டது.

தேசிய சூறா கவுன்சிலுக்கும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

தேசிய சூறாவின் அங்கத்துவ அமைப்பான அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தேசிய சூறா கவுன்சிலின் தலைவர் சட்டத்தரணி ட்டீ. க்கே. அஸூர், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் அஷ். யூனுஸ் தப்ரீஸ் ஆகியோருடன் இருதரப்பிலிருந்தும் பல அங்கத்தவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...