அமைச்சர் சாந்த பண்டார, பா.உ. Dr.சரத் வீரசேகர ஆகியோருடன் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரும் பங்கேற்கும் 111 ஆவது ஆரிகாமம் கந்தூரி இன்று!

Date:

குருநாகலை, தும்மலசூரிய ஆரிகாமத்தில் அடங்கப் பெற்றுள்ள மகான் அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் இஸ்மாஈல் ஆரிப் வலியுல்லாஹ் அவர்களின் பெயரிலான 111 ஆவது உரூஸ் முபாரக் தமாம் மஜ்லிஸ் இன்று (02) பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை நடைபெறும். இந்நிகழ்வின் இறுதி நிகழ்வுகள் நாளை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.00 மணிக்கு நிறைவு பெறும்.

இந்நிகழ்வில் அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் வீரசேகர, சுதத் மஞ்சுள, நளின் பண்டார ஜயமகா, கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவையின் சட்ட ஆலோசகர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சம்பத் தென்னகோன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளதோடு நபிகள் நாயகத்தின் குடும்பத்தாரும் கலந்து கொள்ளவுள்ளதாக அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவை தெரிவித்துள்ளது.

அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் மர்ஸூம் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் இர்பான் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் ஹனீப் மௌலானா அல்காதிரி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...