இஸ்ரேல் அகதி முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது: 106 பலஸ்தீனியர்கள் பலி

Date:

பலஸ்தீனியர்கள் தாக்கியுள்ள முகாம்களின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

திங்கள் மற்றும் ஞாயிறு இரவு மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் நகருக்கு அருகில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 106 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மூன்று மாடி கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்ட காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு ஆரம்பித்த பின்னர் நடந்த இந்த தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் 250 பேர் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...