குவைத் மன்னரின் மறைவுக்கு ஏராளமான இராஜதந்திரிகள் இலங்கையில் அனுதாபம் தெரிவிப்பு

Date:

குவைத் அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபாவின் மறைவுக்காக அனுதாபம் தெரிவிப்பதற்காக இலங்கையிலுள்ள குவைத் தூதரம் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை அனுதாபப் புத்தகத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அனுதாபம் தெரிவிக்க வரும் பிரமுகர்களை தூதரக இடைக்காலப் பொறுப்பதிகாரி உஸ்மான் அல் உமர், நிர்வாக விவகாரங்களின் இராஜதந்திர இணைப்பதிகாரி ஹமத் அல் அஜமி ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கொழும்பில் உள்ள இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்கள் எனப் பலரும் தூதரகத்துக்கு வந்து அனுதாபம் தெரிவித்தனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்களின் பிரசன்னமும் மனப்பூர்வமான அனுதாபங்களும் மறைந்த தலைவருக்கான இரங்கலாக அமைந்ததாகவும் இந்தத் துக்ககரமான நேரத்தில் நாடுகளுக்கிடைய ஆழமான மதிப்பையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்துவதாக அமைந்ததாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
      

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...