குவைத் மன்னர் இறப்புக்கு ரிஷாத் அனுதாபம்!

Date:

குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் உள்ள குவைத் தூதரகத்துக்கு சென்ற ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான குவைத் நாட்டின் பொறுப்பதிகாரி உஸ்மான் அல்-உமர் சந்தித்து தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டில், “மிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறேன். அவரது ஆட்சிக் காலத்தில் குவைத் மக்களுக்கு மகத்தான சேவையை ஆற்றியவர்.

அவரின் மறைவினால், அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தில் குவைத்தின் நீண்டகால நண்பர்களான இலங்கையர்களாகிய நாங்களும் பங்கேற்கின்றோம்.

அத்துடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அமீர் அவர்களின் சேவைகளைப் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் உயர்ந்த இடத்தை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்“ என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...