சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மரணம்: முறையான விசாரணைகள் தேவை: ஜம்இய்யா வேண்டுகோள்

Date:

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் மரணமான சிறுவனின் ஜனாஸா தொடர்பாக வெளியான செய்தி  பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளயதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

அதேநேரம் இத்தருணத்தில் குறித்த சிறுவனுடைய குடும்பத்தினருக்கு  ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது.

அத்துடன் குறித்த சிறுவனின் மறுமை வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தையும் நற்பாக்கியங்களையும் அல்லாஹு தஆலா வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தினருக்கு பொறுமையையும் ஆறுதலையும் வழங்கவேண்டுமெனவும் துஆச் செய்கின்றது.

மேலும் குறித்த மரணம் தொடர்பில் பூரண விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான தெளிவுகள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...