சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மரணம் கொலை என உறுதி!

Date:

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்ட மத்ரசா மாணவனின் மரணமானது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (5) மாலை நேரம் சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் உயிரிழந்த காத்தான்குடி மாணவனின் மரண விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த மரணமானது ஒரு “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மத்ரஸா அதிபர் (மெளலவி) சஹ்னாஸ் என்பவரால் தாக்குதலுக்கு உள்ளாகியே குறித்த 13 வயது மாணவன் உயிரிழந்திருக்கக்கூடுமென மக்கள் மத்தியில் நிலவி வந்த சந்தேகம் இப்போது “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தையடுத்து இன்று (07) நடைபெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் இம் மாணவனின் மரணம் “கொலை” என சட்ட வைத்திய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( மூலம் -Rifthi ali)

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...