தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை: 75 வீதம் குறைவடைந்த கேக் விற்பனை

Date:

இந்த ஆண்டு நத்தார் பண்டிகையின் போது கேக் விற்பனை 75 வீதம் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டைவிட 2023 ஆம் ஆண்டு கேக் விற்பனை 25 வீதம் குறைவடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முட்டை உள்ளிட்ட கேக் உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, நத்தார் பண்டிகைக் காலத்தில் வீடுகளில் கேக் தயாரிக்கும் நடவடிக்கை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...