புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 5.4 பில்லியன் டொலர்கள் வருமானம்

Date:

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர்.

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர் என்று இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, தொழிலாளர்கள் கடந்த நவம்பரில் 537.3 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட 384.4 மில்லியன் டொலர்கள் வருவாயைவிட 40 சதவீதம் அதிகமாகும்.

2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலாளர்கள் 3.3 பில்லியன் டொலர்களை அனுப்பியிருந்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் நிதியானது இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை 275,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...