மியன்மாரின் சைபர் கிரைம் முகாமில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் முயற்சி தோல்வி!

Date:

மியன்மாரின் தொலைதூர எல்லைப் பகுதியில் உள்ள பிரபல சைபர் கிரைம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் சர்வதேச குடிமக்களை விடுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித கடத்தல் மற்றும் அரசு சாரா நிறுவனம் ஒன்றால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை,பலத்த பாதுகாப்புடன் கூடிய வளாகத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கத் தவறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த 56 இளைஞர் யுவதிகள் தாய்லாந்து மற்றும் மியான்மார் எல்லைப் பகுதியில் உள்ள சைபர் கிரைம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

தாய்லாந்தின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலாபகரமான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வாக்குறுதிகளால் இவர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுமார் 56 இலங்கை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 15- 17 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துவதாகவும், சரியாக உணவு வழங்கப்படுதில்லை எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், கூண்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாகவும், அடிப்பதாகவும் அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் கூறியிருந்தார்.

மேலும் தங்களை விடுவிக்க 8000 அமெரிக்க டொலர்கள் கேட்கப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர்களை மீட்பதற்கு மியன்மார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையிலேயே, நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...