அயோத்தி கோவில் திறப்பு விழாவின் எதிரொலி: தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி

Date:

உத்தரபிரதேசம் புலந்த்சாகர் நகரிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில்  புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அதன்படி பிரதமர் மோடி இன்று வியாழக்கிழமை உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

முதல் பிரச்சார கூட்டத்திற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததுடன், இலட்சக்கணக்கான தொண்டர்கள் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வழக்கமாக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அல்லது உத்தரபிரதேச மாநிலம் தனது வாரணாசி தொகுதியில் பிரசாரத்தை தொடங்குவார். இந்த தடவை உத்தரபிரதேசத்தில் புலந்த்சாகர் நகரில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

புலந்த்சாகர் நகரில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி ரூ.19,100 கோடிக்கான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் பெயரில் மிகப்பெரிய வைத்தியசாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் மோடியை தேர்ந்தெடுங்கள் என்ற கருப்பொருளில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், பயன் அடைந்த மக்கள் குறித்த காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. சந்திரயான், ராமர் கோவில், நலத்திட்டங்கள் போன்றவையும் குறிப்பிட்டு பா.ஜனதா வீடியோ மூலம் பிரசாரம் மேற்கொண்டு உள்ளது. பிரதமர் மோடி கனவை மட்டும் விதைப்பவர் அல்ல. செயல் வீரராக திகழ்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...