கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் புதிய தகவல்

Date:

உத்தியோகப்பூர்வ கடன் வழங்குனர்கள் குழுவுடனும் (OCC) சீனாவின் எக்ஸிம் (EXIM) வங்கியுடனும் கடன் மறுசீரமைப்புக்கான கொள்கையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (10) CBSL இன் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த கொள்கை அறிக்கையினை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஏனைய கடன் வழங்குனர்களுடனும் விரைவில் கடன் மறுசீரமைப்புக்கான கொள்கை தொடர்பில் உடன்பாட்டினை எட்டுவதற்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் அடுத்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கடன் பாதையை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் (DDO) நடவடிக்கையை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெறப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் அடிப்படையிலான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வெற்றிகரமான தொடர்ச்சியில் இலங்கை பொருளாதாரத்தின் மீட்சியானது முன்னேற்றம் கண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை அடுத்து காணப்பட்ட எதிர்மறையான விளைவுகளை மாற்றுவதற்கு உதவிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

விலை ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், வருவாய் மேம்பாடு மற்றும் கடன் மறுசீரமைப்பு மூலம் நிதி ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவை வழங்குதல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...