கொழும்பு பேராயரின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Date:

பதில் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கவும், அவரை குறித்த பதவியில் நியமிப்பதை தடுக்கும் இடைக்கால உத்தரவையும் கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு நீதிபதிகளான பிரிதி பத்மன் சூரியசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இந்த விடயம் தொடர்பாக மேலும் இரு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.

இதனை பரிசீலித்த இதை நீதிபதிகள் அமர்வு, இந்த மனுவை எதிர்வரும் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபையும் தேஷ்பந்து தென்னகோனும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...