சனத் நிஷாந்தவின் இறுதி சடங்கு புத்தளம் ஆராச்சிக்கட்டுவில் நடைபெறும்!

Date:

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதி சடங்கை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தளம் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் இறுதி சடங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த வாகன விபத்தில் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் உயிரிழந்தனர்.

ராஜாங்க அமைச்சர் பயணித்த ஆடம்பர ஜீப் முன்னால் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் வண்டியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன் ஜீப் வண்டியின் சாரதி ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு 48 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...