துறைமுக அதிகாரசபை ஏற்பாட்டில் 50 எம்.பிகள் கப்பலில் இன்ப சுற்றுலா!

Date:

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது.

துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்ப சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுவிற்கு உணவு மற்றும் ஏனைய பானங்கள் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு துறைமுக வளாகத்தில் ஒரு குறுகிய கப்பல் சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் பங்கேற்குமாறும் துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விடுத்திருந்த அழைப்பு கடிதத்தின் பிரகாரம் இந்த எம்.பிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...