நாட்டில் 34 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி!

Date:

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் 34,48,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அதன்படி, மொத்த குடும்ப அலகுகளில் 60.5% வருமானம் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக பெருந்தோட்ட துறையில் வருமானம் அதிகம் குறைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,70,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது.

இரண்டாவதாக, கிராமப்புற மக்களின் வருமானம் அதிக வீழ்ச்சியைக் காட்டுகிறது.

கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட 45,00,000 குடும்பங்கள் இருப்பதாகவும், 27,00,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 3.6 மில்லியன். இதில் ஏறக்குறைய 9,50,000 குடும்பங்கள் இருப்பதாகவும், அதில் 5,00,000 குடும்பங்கள் வருமானத்தில் சரிவைக் காட்டுவதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...