மதீனா நகரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி: வலுக்கும் விமர்சனங்கள்

Date:

சவூதி அரேபியாவில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவுக்கு இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பயணம் மேற்கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை புனித நகரமான நபிகள் நாயகம் பள்ளிவாசல் மற்றும் குபா மசூதி முற்றங்களில் நுழைய அனுமதித்ததற்கு சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய மாடல் மற்றும் நடிகை,ஆளும் பாஜக அரசின் அமைச்சரான இவர் முஸ்லிம்கள் மீதான தீவிர விரோதப் போக்குடையவர் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஸ்மிருதி இரானியுடன் வெளியுறவு இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் அரசு முறைப்பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளனர். அங்கு ஹஜ் பயணம் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

பிறகு, இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவுக்கும்,   ஸ்மிருதி இரானி சென்றார்.

அங்கு சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரும், மக்கா மசூதியின் துணை ஆளுநருமான சவுத் பின் மஷால் பின் அப்துல் அஜீசுடன் ஸ்மிருதி இரானி ஆலோசனை மேற்கொண்டார்.

ஹஜ், உம்ரா பயணங்களின் போது இந்தியப் பயணிகளுக்குத் தேவையான சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

சவூதி  அரசு அதிகாரிகள், ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், மதினாவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டேன். அல் மஸ்ஜிதுன் நபவி மசூதி, உஹுத் மலை, இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதியான குபா மசூதிக்கும் சென்றேன்.

ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றோடு பின்னிப் பிணைந்த சவூதி அதிகாரிகளின் மரியாதையுடன் இந்த இடங்களுக்கு சென்றதன் முக்கியத்துவம், நமது கலாச்சார மற்றும் ஆன்மீக ஈடுபாட்டின் ஆழத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அந்த பதிவில் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

இதனை பார்த்து, நெட்டிசன்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...