முஸ்லிம்கள் பிளவுபடுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக முடியும்:  உலமா சபை பொதுச்செயலாளர்

Date:

முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க்ஹ் அர்கம் நூரமித் தெரிவித்தார்.

அன்னாரின் இளைய மகன் அண்மையில் காலம் சென்றதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்கள் அவரது இல்லத்துக்கு விஜயம் செய்த வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடு, அத்துடன் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அனைத்து மக்களும் சமமான உரிமைகளைப் பெற்றவர்களே.

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் ஒன்றாய் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகரும் நடப்புத் தலைவருமான அஸ்-ஸெய்யித் ஸாலிம் றிபாய் மௌலானா சார்பில் அவருடைய சகோதரர் அஸ்-ஸெய்யித் திஹாம் றிபாய் மௌலானா, ஏனைய ஸ்தாபகர்களான அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, அஷ். அப்துல் முஜீப் (கபூரி), நிர்வாக உத்தியோகத்தர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...