இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

Date:

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி 76 வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு – காலி முகத்திடலைச் சூழவுள்ள பகுதியில் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இந்த விசேட போக்குவரத்து திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 03ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து தடவைகள், வீதி மூடல் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் பிப்ரவரி 2ஆம் திகதி வரை காலை 06 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் பயிற்சி நடைபெறும்.

மேலும், பெப்ரவரி 03ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி தொடக்கம் பெப்ரவரி 04ஆம் திகதி நிகழ்வு முடியும் வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும்.

இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...