இரு நட்பு நாடுகளுக்கும் மகிழ்ச்சியான ஆண்டாகட்டும் – சவூதி அரேபியா தூதரகத்தின் புத்தாண்டு வாழ்த்து

Date:

அனைவருக்கும் அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எதிர்காலம் சிறந்ததாக அமைய வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் புதிய  ஆண்டானது கடந்த ஆண்டுகளை விடவும் செழிப்பானதாக அமைய வேண்டும் .

2024 புத்தாண்டின் வருகையானது அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழுமைக்கான எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளை எமக்கு அளிக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, புதிய இலக்குகள், அடைவுகள், மற்றும் புதிய உத்வேகங்களையும் கொண்டு வரட்டும்.

இரு நட்பு நாடுகளின் மக்களுக்கும் முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு ஆண்டாக வருகின்ற ஆண்டு அமைய வாழ்த்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...