இலங்கை அணி பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: அனுமதி இலவசம்

Date:

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறித்த போட்டியானது, இன்று (11) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விளையாட்டரங்கில் சி மற்றும் டி பிரிவுகளிலுள்ள ஆசனங்களே இவ்வாறு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பார்வையாளர்கள் நுழைவதற்காக நுழைவு வாயில்கள் பிற்பகல் 01 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடைபெறவிருக்கும் t20 போட்டியைக் காண www.srilankacricket.lk மற்றும் பிரேமதாச மைதானத்திலும் பற்றுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும்.

அத்துடன், காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை பற்றுச்சீட்டு கவுண்டர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...