இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கௌசல்யா நவரத்ன

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன, பதவியேற்கவுள்ளார்.

2024-2025 ஆம் காலக்கட்டத்துக்கு அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, BASL இன் செயலாளராக சதுர கல்ஹேனவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழாவில் இவர்கள் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளனர்.

BASL இன் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் நேற்று (10) சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேமுனி டி சில்வாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நவரத்ன இரண்டாவது முறையாக BASL இன் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், கல்ஹேனவும் செயலாளர் பதவிக்கான வேட்புமனுக்களை கையளித்திருந்தார்.

இந் நிலையில் வேறு வேட்பு மனுக்கள் இல்லாதமையினால் இவர்கள் இருவரும் போட்டியின்றி குறித்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...