உச்சம் தொட்ட தேங்காய் விலை: மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது

Date:

இலங்கையில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை அதிகரித்து வருவதாக தெங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

”தென்னை அபிவிருத்திச் சபையின் கூற்றுப்படி, ஆண்டு முழுவதும் சுமார் 1500 மி.மீ மழைவீழ்ச்சியும், சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தென்னை அறுவடைக்கு தேவை.

ஆனால், கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் காணப்பட்டது. மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது.

அறுவடை குறைந்துள்ளமையால் தேங்காய் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் மே மாதத்திற்குள் படிப்படியாக இந்த நிலை சீராகும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் அறுவடை குறைந்துள்ளமையால் சந்தையில் தேங்காய்க்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் 70, 80 ரூபாவாக இருந்த சிறிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 100 ரூபாவை எட்டியுள்ளது.

100 ரூபா அல்லது அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 ரூபாவை தாண்டியுள்ளது. எதிர்காலத்தில் இதனையும் விட விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் என தென்னை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...