ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் போராட்டம் ஆரம்பம்

Date:

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி  ஐக்கிய மக்கள் சக்தி  ஏற்பாடு செய்த போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமானது.

“2024, ஒரு மாற்றத்தை உருவாக்கும் ஆண்டு” என்ற தலைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள்,  அமைப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமகி ஜனபலவேகவின் அனைத்து மகளிர் மற்றும் இளைஞர் கிளைகளின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...