கப்சோவினால் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஆரம்பம்!

Date:

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் “Youth Media Project” வேலைத்திட்டம் கடந்த வெள்ளியன்று (26) கப்ஸோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் காரைதீவு பிரதேசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது இடம்பெற்று வருகின்றது.

இவ் வேலைத்திட்டமான அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வலர்களை கொண்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் இவ் வேலைத்திட்டமானது ஒரு வருட காலமாக இடம்பெறவுள்ளதுடன் இந் நிகழ்வுகளுக்கு வளவாளராக 27ம் ,28ம் திகதிகளில் விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கு “Digital Story Telling ” சம்பந்தமான தெளிவினை வழங்கியிருந்தார்.

(ஏ. கே. ஹஷான் அஹமட்)

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...