கல்வித்துறையை கடுமையாக பாதித்த பொருளாதார நெருக்கடி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Date:

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கல்வித் துறை கடுமையாகப் பாதித்துள்ளதாக, சனத்தொகை மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்கள் 54.9 வீதம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வியை முற்றாக இடை நிறுத்தியவர்கள் 2.1 வீதம் உள்ளதாகவும், திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 2022 முதல் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே, மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்களின் கல்வியில் நகரப் பகுதியில் 54.2 வீதமும், கிராமப் புறத்தில் 55.1 வீதமும், பெருந்தோட்டப் பகுதியில் 55.1 வீதமும் தடைப்பட்டுள்ளது.

பாடசாலைப் பொருட்களை வாங்காமல்  இருந்ததற்காக, 53.2 சத வீதம், சீருடை வாங்காமல் அல்லது குறைக்காமல் இருந்ததற்காக 44.0 சத வீதம், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்ததற்காக 40.6 சத வீதம் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டில் 17.5 வீதமான பிள்ளைகள் கல்விப் பாடங்களை மட்டுப்படுத்தியுள்ளதாகவும், கல்வியை முற்றாக இடை நிறுத்தியவர்களின் வீதம் 2.1 வீதமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இது ‘2023 பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்த குடும்ப ஆய்வு’ என்று பெயரிடப்பட்டுள்ளதோடு, கல்வி, வேலை வாய்ப்பு, தனி நபர் வருமானம், குடும்ப வருமானம் மற்றும் செலவு, உடல் நலம் உள்ளிட்ட குடும்ப அலகுகளின் கடன் ஆகிய ஏழு தலைப்புக்களின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...