கொழும்பு பேராயரின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Date:

பதில் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கவும், அவரை குறித்த பதவியில் நியமிப்பதை தடுக்கும் இடைக்கால உத்தரவையும் கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு நீதிபதிகளான பிரிதி பத்மன் சூரியசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இந்த விடயம் தொடர்பாக மேலும் இரு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.

இதனை பரிசீலித்த இதை நீதிபதிகள் அமர்வு, இந்த மனுவை எதிர்வரும் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபையும் தேஷ்பந்து தென்னகோனும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...