சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த தம்மிக்க!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நோக்கத்துடன் காய் நகர்த்தும் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சிறுபான்மை கட்சிகளுடன் அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும் ஒரு முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் வர்த்தகர் தம்மிக்க பேரேரா அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லையென அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...