செங்கடலை இரத்தக்கடலாக மாற்ற முயற்சி: துருக்கி ஜனாதிபதி குற்றச்சாட்டு

Date:

யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூதி போராளிகள் தேவைக்கு அதிகமாக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த நிலையில், ஹூதி போராளிகள் மீது தாக்குதல் நடத்தி செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சிப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தாக்குதலில் இருந்து ஹூதி போராளிகள் தம்மை தற்காத்துக் கொள்கின்றனர் எனவும் எர்டோகன் கூறியுள்ளார்.

அதேவேளை அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தாக்குதலுக்கு பதிலடி வழங்க போவதாக ஹூதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது டோர்ன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல்களின் அதிகரிப்புடன், அமெரிக்க மற்றும் பிரித்தானிய விமானப்படையினர் யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல தளங்களை அழித்துள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...