டெலிகொம்மின் தலைவர் ரியாஸ் மிஹிலார் உட்பட ஏழு பணிப்பாளர்கள் இராஜினாமா!

Date:

தலைவர் உட்பட ஆறு பணிப்பாளர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ததாக ஸ்ரீலங்கா டெலிகொம் நேற்று அறிவித்தது.

நிறைவேற்றுத் தரம் அல்லாத சுயாதீனத் தலைவராகச் செயற்பட்ட ரியாஸ் மிஹிலார், ஜனாதிபதி கோத்தாபயவின் ஆட்சியில் தலைவராக நியமிக்கப்பட்ட 120,000 பங்குகளை வைத்திருக்கும் ரொஹான் பெர்ணான்டோ, லலித் செனவிரத்ன, ரஞ்சித் ரூபசி்ங்ஹ, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், திறைசேரி பிரதிநிதி கேஏ விமலேந்திரராஜ் ஆகியோரே இராஜினாமா செய்தனர்.

SLT இன் துணை நிறுவனமான eChanneling Plc இன் தலைவர் பதவியிலிருந்தும் ரொஹான் பெர்னாண்டோ ராஜினாமா செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 24 அன்று SLT யை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைக்குமாறு திறைசேரி செயலாளருக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்தே இவர்களின் இராஜினாமா இடம் பெற்றுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக கே.டி.டி.டி. அரந்தர (தலைவர்), டாக்டர் கே.ஏ.எஸ். கீரகல, தினேஷ் விதானபத்திரன, பேராசிரியர் கே.எம். லியனகே, கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க மற்றும் சத்துர மொஹொட்டிகெதர ஆகியோர் அரச தரப்பினராக முன்மொழியப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...